MARC காட்சி

Back
காமதகனமூர்த்தி
000 : nam a22 7a 4500
008 : 170508b ii 000 0 tam d
245 : _ _ |a காமதகனமூர்த்தி
300 : _ _ |a சைவம்
340 : _ _ |a கருங்கல்
500 : _ _ |a மலர்க்கணை விடுத்த காமனை கண்ணால் எரித்த காமதகன மூர்த்தி
510 : _ _ |a
  1. வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978. 
  2. T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914. 
  3. P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994. 
  4. .ஆசனபதம் 
  5. உக்கிரபீடம் 
  6. உபபீடகம் 
  7. தண்டிலம் 
  8. பரமசாயிகம் 
  9. மகாபீடபதம் 
  10. மண்டூகம் 
  11. மயமதம் 
  12. மானசாரம் 
  13. வாசுத்து சூத்திர உபநிடதம் 
  14. ஸ்ரீதத்வநிதி 
  15. அனுபோக பிரசன்ன ஆரூடம் 
  16. அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி 
  17. காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம் 
  18. சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
520 : _ _ |a குமார சம்பவம் நிகழ்வதற்காக ஈசனின் மேல் தன் மலர்க்கணைகளை எய்த மன்மதனை தன் நெற்றிக்கண்ணால் எரித்து சாம்பலாக்கினார் ஈசன். அந்த ஈசனே காமதகனமூர்த்தி. பின் மன்மதனின் துணைவியாகிய இரதியின் வேண்டுகோளுக்கிரங்கி மதனை உயிர்ப்பிக்கிறார். ஆனால் இரதி கண்களுக்கு மட்டும் அவன் தென்படுவான் என்றும், பிறர் கண்களுக்கு புலனாகான் என்றும் கூறுகிறார். காதல் இணைகளாகிய இரதியும் மதனும் சிவபெருமானை வணங்கி நிற்கின்றனர். இக்காட்சி திருவாலீஸ்வரர் கோயிலில் சிற்ப வடிவத்தில் அமைந்துள்ளது. இறைவன் ஜடாமகுடத்துடன் விளங்குகிறார். பீடத்தின் மீது அமர்ந்துள்ள யோகியான சிவபெருமான் வலது காலை தொங்கவிட்டு கீழே அமர்ந்துள்ள பூதத்தின் தோளில் வைத்துள்ளார். வலது காலை மடக்கி, பாதத்தை குஞ்சித பாதமாகக் கொண்டு பூதத்தின் தலையின் மீது வைத்துள்ளார். நான்கு திருக்கைகளில் பின்னிரு கைகளில் மானையும் மழுவையும் பற்றியுள்ளார். முன் வலது கை சின் முத்திரை காட்டுகிறது. இடது முன் கையில் சுவடி உள்ளது.கழுத்தில் கண்டிகையும், சரப்பளியும், வயிற்றில் உதரபந்தமும், மார்பில் முப்புரிநூலும், கைகளில் தோள்வளை, முன் வளைகளும், கால்களில் அரியகமும், இடையில் இடைக்கட்டுடன் கூடிய அரையாடையும் இறைவனின் ஆடையணிகளாக உள்ளன. சிவனாரின் இடது புறத்தில் இரதி இரு கைகளை கூப்பி வணங்கிய நிலையில் உள்ளாள். இரதியின் பின்புறம் அவள் தோளை தொட்டவாறு நிற்கும் மாரன் தான் செய்த செயலுக்கு வருந்துபவனாக அப்பாவியாக முகத்தை வைத்துள்ளான். இக்காட்சி மிகவும் தத்ரூபமாக சிற்பியால் வடிக்கபட்டுள்ளது.
653 : _ _ |a காமதகனமூர்த்தி, காமாந்தகர், காமாந்தக மூர்த்தி, திருவாலீஸ்வரம், கைலாயமுடையார் கோயில், கைலாசநாதர் கோயில், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், முதலாம் இராஜராஜன் கோயில், சோழர் கலைப்பாணி, பாண்டிய மண்டலம், சோழ பாண்டியர் கலைப்பாணி, பாண்டிய நாட்டில் சோழர் கோயில், சிவன் கோயில், சிவத்தலங்கள்
700 : _ _ |a காந்திராஜன் க.த.
752 : _ _ |a கைலாசநாதர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c திருவாலீஸ்வரம் |d திருநெல்வேலி |f அம்பாசமுத்திரம்
905 : _ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜ சோழன்
914 : _ _ |a 8.73252599
915 : _ _ |a 77.44489074
995 : _ _ |a TVA_SCL_000261
barcode : TVA_SCL_000261
book category : கற்சிற்பங்கள்
Primary File :

TVA_SCL_000261_கைலாசநாதர்-கோயில்_காமதகனமூர்த்தி-001.jpg