MARC காட்சி

Back
வாமனர் மற்றும் மாவலிச் சக்கரவர்த்தி
000 : nam a22 7a 4500
008 : 170508b ii 000 0 tam d
245 : _ _ |a வாமனர் மற்றும் மாவலிச் சக்கரவர்த்தி
300 : _ _ |a வைணவம்
340 : _ _ |a மரம்
500 : _ _ |a வாமனர் வைஷ்ணவ ஸ்தானகத்தில் நின்றுள்ளார். இடது கையில் குடையையும், வலது கையில் கமண்டலத்தையும் பிடித்துள்ளார். எல்லாவிதமான ஆடையணிகளுடன் மாணியாக நின்றுள்ளார். மாபலி சக்கரவர்த்தி அருகில் கைகளைக் கூப்பியபடி நின்றுள்ளார். பலி என்ற மன்னர் பிரகலாதனின் மகனாவார். அசுர குலத்தைச் சேர்ந்த இவர் பூமி முழுவதையும் தம் ஆளுகைக்குக் கீழ் கொண்டு வரத் திட்டமிட்டார். அதன் பொருட்டு வேள்வி ஒன்றினைச் செய்திட முற்பட்டார். பலி மன்னருக்கு ஏற்பட்ட பேராசையையும் தன் முனைப்பையும் அழித்திட நினைத்த விஷ்ணு வாமன (குள்ள) வடிவம் எடுத்தார். வேள்வியில் ஈடுபட்டிருந்த பலி மன்னரிடம் மூன்றடி நிலம் கேட்டார். குறுவடிவிலான வாமனனின் விருப்பத்தை ஏற்று அவர் கால் அடியின் வாயிலாகவே எடுத்துக் கொள்ளப்பணித்தார். இந்நிலையில் வாமனன் திருவிக்கிரமன் என்ற பெயருடைய நெடியோனாகத் தோற்றி தமது முதலடியால் மண்ணுலகையும், இரண்டாவது அடியால் விண்ணுலகையும் அளந்து மூன்றாவது அடியைப் பலி எனப்படும் மாபலி மன்னரின் தலையின் மீது வைத்து மன்னரின் தன்முனைப்பையும், பேராசையையும் அழித்தார்.
510 : _ _ |a
  1. வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978. 
  2. T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914. 
  3. P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994. 
  4. .ஆசனபதம் 
  5. உக்கிரபீடம் 
  6. உபபீடகம் 
  7. தண்டிலம் 
  8. பரமசாயிகம் 
  9. மகாபீடபதம் 
  10. மண்டூகம் 
  11. மயமதம் 
  12. மானசாரம் 
  13. வாசுத்து சூத்திர உபநிடதம் 
  14. ஸ்ரீதத்வநிதி 
  15. அனுபோக பிரசன்ன ஆரூடம் 
  16. அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி 
  17. காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம் 
  18. சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
520 : _ _ |a தேசிய மைய அருங்காட்சியகம் சென்னை எழும்பூரில் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாட்டு மற்றும் இந்தியப் பகுதிகளில் இருந்து வந்த பழமையான தொல்பொருட்கள், கலைவடிவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவைகளாக சிற்பங்களைக் கூறலாம். பல காலகட்டங்களைச் சேர்ந்த அரசுகளின் கலைப்பாணியில் வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள் இங்கு பாதுகாக்கப்பட்டுள்ளன. கல், மரம், உலோகம், சுதை போன்ற மூலப்பொருட்களால் ஆக்கப்பட்ட சமயம், வாழ்வியல், கலை மற்றும் பொது வடிவங்கள் சிற்பங்களாக உள்ளன. சிவ வடிவங்கள், விஷ்ணு உருவங்கள், சமண தீர்த்தங்கரர்கள், புத்தர், முருகன், கணபதி, ஜேஷ்டா, மகிஷாசுரமர்த்தினி போன்ற சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. அவை எண்ணிக்கையிலும் அதிகம் காணப்படுகின்றன. கலைப்பொருட்களாக பாதுகாக்கப்பட்டுள்ள சிற்பங்கள் கலை, புராணம், சமயம், பண்டைய சமூகம், பண்பாடு, பொருளாதாரம் ஆகியவற்றின் வரலாறு அறிய மிகவும் உதவியாய் இருக்கின்றன.
653 : _ _ |a சென்னை அரசு அருங்காட்சியகம், மைய அருங்காட்சியகம், சென்னை, மானிடவியல் துறை, சிற்பங்கள், கலைப்பொருள், மரச்சிற்பங்கள், கலைவடிவங்கள், மரப்பலகைச் சிற்பங்கள்
700 : _ _ |a திரு.சுந்தர்ராஜ், பரிவாதினி ஸ்டுடியோ, சென்னை.
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம்
752 : _ _ |a மைய அருங்காட்சியகம், சென்னை |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c சென்னை |d சென்னை
905 : _ _ |a கி.பி.19-ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 13.0826802
915 : _ _ |a 80.2707184
995 : _ _ |a TVA_SCL_001221
barcode : TVA_SCL_001221
book category : மரச்சிற்பங்கள்
cover images TVA_SCL_001221_மைய-அருங்காட்சியகம்-சென்னை_வாமனர்-மற்றும்-மாவலிச்-சக்கரவர்த்தி-001.jpg :
Primary File :

TVA_SCL_001221_மைய-அருங்காட்சியகம்-சென்னை_வாமனர்-மற்றும்-மாவலிச்-சக்கரவர்த்தி-001.jpg