சிற்பம்

வாமனர் மற்றும் மாவலிச் சக்கரவர்த்தி
சிற்பத்தின் பெயர் | வாமனர் மற்றும் மாவலிச் சக்கரவர்த்தி |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | மைய அருங்காட்சியகம், சென்னை |
ஊர் | சென்னை |
மாவட்டம் | சென்னை |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | வைணவம் |
ஆக்கப்பொருள் | மரம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.19-ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
வாமனர் வைஷ்ணவ ஸ்தானகத்தில் நின்றுள்ளார். இடது கையில் குடையையும், வலது கையில் கமண்டலத்தையும் பிடித்துள்ளார். எல்லாவிதமான ஆடையணிகளுடன் மாணியாக நின்றுள்ளார். மாபலி சக்கரவர்த்தி அருகில் கைகளைக் கூப்பியபடி நின்றுள்ளார். பலி என்ற மன்னர் பிரகலாதனின் மகனாவார். அசுர குலத்தைச் சேர்ந்த இவர் பூமி முழுவதையும் தம் ஆளுகைக்குக் கீழ் கொண்டு வரத் திட்டமிட்டார். அதன் பொருட்டு வேள்வி ஒன்றினைச் செய்திட முற்பட்டார். பலி மன்னருக்கு ஏற்பட்ட பேராசையையும் தன் முனைப்பையும் அழித்திட நினைத்த விஷ்ணு வாமன (குள்ள) வடிவம் எடுத்தார். வேள்வியில் ஈடுபட்டிருந்த பலி மன்னரிடம் மூன்றடி நிலம் கேட்டார். குறுவடிவிலான வாமனனின் விருப்பத்தை ஏற்று அவர் கால் அடியின் வாயிலாகவே எடுத்துக் கொள்ளப்பணித்தார். இந்நிலையில் வாமனன் திருவிக்கிரமன் என்ற பெயருடைய நெடியோனாகத் தோற்றி தமது முதலடியால் மண்ணுலகையும், இரண்டாவது அடியால் விண்ணுலகையும் அளந்து மூன்றாவது அடியைப் பலி எனப்படும் மாபலி மன்னரின் தலையின் மீது வைத்து மன்னரின் தன்முனைப்பையும், பேராசையையும் அழித்தார்.
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | திரு.சுந்தர்ராஜ், பரிவாதினி ஸ்டுடியோ, சென்னை. |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
தேசிய மைய அருங்காட்சியகம் சென்னை எழும்பூரில் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாட்டு மற்றும் இந்தியப் பகுதிகளில் இருந்து வந்த பழமையான தொல்பொருட்கள், கலைவடிவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவைகளாக சிற்பங்களைக் கூறலாம். பல காலகட்டங்களைச் சேர்ந்த அரசுகளின் கலைப்பாணியில் வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள் இங்கு பாதுகாக்கப்பட்டுள்ளன. கல், மரம், உலோகம், சுதை போன்ற மூலப்பொருட்களால் ஆக்கப்பட்ட சமயம், வாழ்வியல், கலை மற்றும் பொது வடிவங்கள் சிற்பங்களாக உள்ளன. சிவ வடிவங்கள், விஷ்ணு உருவங்கள், சமண தீர்த்தங்கரர்கள், புத்தர், முருகன், கணபதி, ஜேஷ்டா, மகிஷாசுரமர்த்தினி போன்ற சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. அவை எண்ணிக்கையிலும் அதிகம் காணப்படுகின்றன. கலைப்பொருட்களாக பாதுகாக்கப்பட்டுள்ள சிற்பங்கள் கலை, புராணம், சமயம், பண்டைய சமூகம், பண்பாடு, பொருளாதாரம் ஆகியவற்றின் வரலாறு அறிய மிகவும் உதவியாய் இருக்கின்றன.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 17 |
பிடித்தவை | 0 |