000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a பல்லவ அரசன் |
300 | : | _ _ |a அரச உருவம் |
340 | : | _ _ |a மணல் கல் |
500 | : | _ _ |a பல்லவ அரசனின் பட்டாபிஷேக நிகழ்வு |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a பல்லவ மன்னனாய் புதிதாய் ஆட்சிப் பொறுப்பேற்கும் இளவலுக்கு பட்டாபிஷேகம் செய்யும் சிற்பக் காட்சி. வைகுந்தப் பெருமாள் கோயிலின் திருச்சுற்று மாளிகையில் அமைந்துள்ள பல்லவர்களின் குலமரபுப் பட்டியல் சிற்ப வரிசையில் பட்டாபிஷேக சிற்பங்களே அதிகம் காணப்படுகின்றன. இச்சிற்பத் தொகுதியில் மகுடம் சூடவிருக்கும் மன்னன் அரியணையில் அமர்ந்துள்ளான். இரு கால்களையும் தொங்கவிட்டவாறும், இரு கைகளையும் இரு தொடையில வைத்தவாறும் வீரமாய் அமர்ந்துள்ள பல்லவ குல திலகத்திற்கு தலைக்கு மேலே இரு வேதியர்கள் புனித நீரை ஊற்றுகின்றனர். மன்னன் நெற்றியில் கண்ணி மாலை அணிந்து மகுடம் தரித்துள்ளான். நீள்காதுகளில் குண்டலங்கள் அணிந்துள்ளான். கழுத்தில் கண்டிகையும் சரப்பளியும், மார்பில் சன்னவீரமும் அணி செய்கின்றன. தோள்மாலை தோளிலும், தோள்வளை, முன் வளை ஆகியன கைகளிலும் மிளிர்கின்றன. ஆடையின் இடைக்கட்டு முன்னோக்கி விழுந்துள்ளது. இக்காட்சியின் அருகில் குடை வைத்தவாறு ஒருவர் நின்றுள்ளார். இவர் பல்லவர் காலத்தில் சீனாவிலிருந்து காஞ்சிக்கு வருகை புரிந்த சீனப்பயணி யுவான்சுவாங் என்பவராய் இருக்கலாம். இச்சிற்பத் தொகுதியில் காட்டப்படும் அமர்வு நிலை, ஆடையணிகள் ஆகியவற்றைக் காணும் பொழுது பல்லவர் கால சமூகப் பண்பாடு நன்கு விளங்குகிறது. |
653 | : | _ _ |a பல்லவ அரசன், வைகுண்ட பெருமாள் கோயில், வைகுந்தப் பெருமாள் கோயில், இரண்டாம் நந்திவர்மன், காஞ்சிபுரம், தொண்டைமண்டலம், பல்லவர் கலைகள், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் சிற்பங்கள், விஷ்ணு சிற்பங்கள், பெருமாள் சிற்பங்கள், திருமால் சிற்பங்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a வைகுண்டப் பெருமாள் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம் |
905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் நந்திவர்மப் பல்லவன் |
914 | : | _ _ |a 12.83711742 |
915 | : | _ _ |a 79.71008599 |
995 | : | _ _ |a TVA_SCL_000105 |
barcode | : | TVA_SCL_000105 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |