000 |
: |
nam a22 7a 4500 |
008 |
: |
170508b ii 000 0 tam d |
245 |
: |
_ _ |a பார்சுவநாதர் |
300 |
: |
_ _ |a சமணம் |
340 |
: |
_ _ |a கருங்கல் |
500 |
: |
_ _ |a 24 சமண தீர்த்தங்கரர்களில் 23-வது தீர்த்தங்கரர் பார்சுவநாதர் |
510 |
: |
_ _ |a
- வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978.
- T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914.
- P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994.
- .ஆசனபதம்
- உக்கிரபீடம்
- உபபீடகம்
- தண்டிலம்
- பரமசாயிகம்
- மகாபீடபதம்
- மண்டூகம்
- மயமதம்
- மானசாரம்
- வாசுத்து சூத்திர உபநிடதம்
- ஸ்ரீதத்வநிதி
- அனுபோக பிரசன்ன ஆரூடம்
- அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி
- காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம்
- சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
|
520 |
: |
_ _ |a பார்சுவநாதர், நேமிநாதரை அடுத்துத் தோன்றியவர். கி.மு.எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். 23ஆவது தீர்த்தங்கரர். இவர், அரச குலத்தில் தோன்றியவர். நூறு ஆண்டுகள் உயிர் வாழ்ந்தவர். முப்பது ஆண்டுகள் இல்லற வாழ்வு நடத்தினார்; எழுபது ஆண்டுகள் துறவு வாழ்வு மேற்கொண்டார். உயிர்க் கொலை, சாதிப் பாகுபாடு இவற்றைக் கடுமையாக எதிர்த்தார். பார்சுவநாதர், நாடெங்கும் சமண சமயத்தைப் பரப்புவதில் பெரும் பங்காற்றியவர். வேத வேள்விச் சமயத்தாரின் தாக்குதல்களிலிருந்து இம்மதத்தைக் கட்டிக் காத்த பெருமையும் இவருக்கு உண்டு. துறவியர், பெண் துறவியர், இல்லற ஆடவர், இல்லறப் பெண்டிர் என்று நான்கு வகைக் குழுக்களாகப் பிரித்துச் சமண சமயத்தைப் பரப்பினார். ஆர்யதத்தர் என்ற துறவியின் தலைமையில் 16,000 துறவிகள், புட்பகுலர் என்ற பெண் துறவியின் தலைமையில் 38,000 குரத்திகள் (பெண் துறவியர்), சுவரதர் என்பவர் தலைமையில் 1,64,000 இல்லற ஆடவர், சுநந்தர் தலைமையில் 3,27,000 இல்லறப் பெண்டிர் ஆகிய இவர்கள் மூலம் நாடெங்கும் சமண மதம் பரவும் வழிவகைகளைப் பார்சுவநாதர் செய்தார். பார்சுவனாதரை, கமடன் என்னும் அசுரன் பாறைகொண்டு தாக்குகிறான். அவரை காக்க தர்நேந்திரன் என்னும் ஐந்து தலை நாகம் மேலிருந்து காக்கின்றான். இருவரையும், பத்மாவதி இயக்கி தன்னுடைய வஜ்ர குடையால் காக்கின்றாள். தோல்வியுற்ற கமடன், பார்சுவனாதரின் தாமரை பதத்தில் சரணடைகின்றான். சமணர் மலை சிற்பத் தொகுதியில் அமைந்துள்ள பார்சுவ நாதர் நெடிய உருவமாக, திகம்பரராக, திசைகளையே ஆடையாக உடுத்து, சமபாதத்தில் தாள் தாழ் தடக்கை நிலையில் (காயோசர்க்கம்) தாமரைப் பீடத்தின் மேல் நின்றுள்ளார். பார்சுவநாதரின் தலைக்கு மேல் குடையாக ஐந்து தலை நாகம் காட்டப்பட்டுள்ளது. |
653 |
: |
_ _ |a பார்சுவநாதர், 23-வது தீர்த்தங்கரர், சமணர் குடைவரை, தீர்த்தங்கரர், பேச்சிப்பள்ளம், கீழக்குயில்குடி, சமணர் சிற்பங்கள், சமணர் குடைவரை, தீர்த்தங்கரர், சமணர் சிற்பங்கள், மதுரை சமண சிற்பங்கள், பாண்டிய நாட்டு சமணம், பாண்டிய நாட்டு சமண சிற்பங்கள் |
700 |
: |
_ _ |a காந்திராஜன் க.த. |
752 |
: |
_ _ |a பேச்சிப்பள்ளம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c கீழக்குயில் குடி |d மதுரை |f மதுரை |
905 |
: |
_ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர் |
914 |
: |
_ _ |a 9.92251696 |
915 |
: |
_ _ |a 78.04749459 |
995 |
: |
_ _ |a TVA_SCL_000281 |
barcode |
: |
TVA_SCL_000281 |
book category |
: |
கற்சிற்பங்கள் |
Primary File |
: |
TVA_SCL_000281_பேச்சிப்பள்ளம்_பார்சுவநாதர்-001.jpg
|