MARC காட்சி

Back
பல்லவ அரசன்
000 : nam a22 7a 4500
008 : 170508b ii 000 0 tam d
245 : _ _ |a பல்லவ அரசன்
300 : _ _ |a அரச உருவம்
340 : _ _ |a மணல் கல்
500 : _ _ |a பல்லவ அரசனின் பட்டாபிஷேக நிகழ்வு
510 : _ _ |a
  1. வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978. 
  2. T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914. 
  3. P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994. 
  4. .ஆசனபதம் 
  5. உக்கிரபீடம் 
  6. உபபீடகம் 
  7. தண்டிலம் 
  8. பரமசாயிகம் 
  9. மகாபீடபதம் 
  10. மண்டூகம் 
  11. மயமதம் 
  12. மானசாரம் 
  13. வாசுத்து சூத்திர உபநிடதம் 
  14. ஸ்ரீதத்வநிதி 
  15. அனுபோக பிரசன்ன ஆரூடம் 
  16. அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி 
  17. காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம் 
  18. சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
520 : _ _ |a பல்லவ மன்னனாய் புதிதாய் ஆட்சிப் பொறுப்பேற்கும் இளவலுக்கு பட்டாபிஷேகம் செய்யும் சிற்பக் காட்சி. வைகுந்தப் பெருமாள் கோயிலின் திருச்சுற்று மாளிகையில் அமைந்துள்ள பல்லவர்களின் குலமரபுப் பட்டியல் சிற்ப வரிசையில் பட்டாபிஷேக சிற்பங்களே அதிகம் காணப்படுகின்றன. இச்சிற்பத் தொகுதியில் மகுடம் சூடவிருக்கும் மன்னன் அரியணையில் அமர்ந்துள்ளான். இரு கால்களையும் தொங்கவிட்டவாறும், இரு கைகளையும் இரு தொடையில வைத்தவாறும் வீரமாய் அமர்ந்துள்ள பல்லவ குல திலகத்திற்கு தலைக்கு மேலே இரு வேதியர்கள் புனித நீரை ஊற்றுகின்றனர். மன்னன் நெற்றியில் கண்ணி மாலை அணிந்து மகுடம் தரித்துள்ளான். நீள்காதுகளில் குண்டலங்கள் அணிந்துள்ளான். கழுத்தில் கண்டிகையும் சரப்பளியும், மார்பில் சன்னவீரமும் அணி செய்கின்றன. தோள்மாலை தோளிலும், தோள்வளை, முன் வளை ஆகியன கைகளிலும் மிளிர்கின்றன. ஆடையின் இடைக்கட்டு முன்னோக்கி விழுந்துள்ளது. மகுடாபிஷேகத்தை ஒருவர் கை கூப்பி வணங்கிய நிலையில் காண்கின்றார். இக்காட்சியைக் காணும் மற்றொருவர் கையில் ஏதோ ஒரு பொருளை வைத்துள்ளார். அரசனின் காலருகே பக்கத்திற்கொருவராக இருவர் அமர்ந்து இக்காட்சியை மகிழ்ச்சியுடன் காண்கின்றனர். இருவரின் தலையணியும் ஒன்று போல் உள்ளது. கழுத்தில் சரப்பளி அணிந்துள்ளனர். ஆடை அறியக்கூட வில்லை. ஸ்வஸ்திகாசனத்தில் கால்களை குறுக்கே மடித்து அமர்ந்துள்ளனர். அரசனின் இடதுபுறமிருப்பவர் இடது கையை இடது தொடையில் வைத்தும், வலது கையை கடக முத்திரையிலும் வைத்தும் உள்ளார். வலப்புறமிருப்பவர் முன்னவருக்கு நேர் மாறாய் கையமைதிகளைக் கொண்டுள்ளார். இச்சிற்பத் தொகுதியில் காட்டப்படும் அமர்வு நிலை, ஆடையணிகள் ஆகியவற்றைக் காணும் பொழுது பல்லவர் கால சமூகப் பண்பாடு, மரபு நிலை, கலாச்சாரம் நன்கு விளங்குகிறது.
653 : _ _ |a பல்லவ அரசன், வைகுண்ட பெருமாள் கோயில், வைகுந்தப் பெருமாள் கோயில், இரண்டாம் நந்திவர்மன், காஞ்சிபுரம், தொண்டைமண்டலம், பல்லவர் கலைகள், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் சிற்பங்கள், விஷ்ணு சிற்பங்கள், பெருமாள் சிற்பங்கள், திருமால் சிற்பங்கள்
700 : _ _ |a காந்திராஜன் க.த.
752 : _ _ |a வைகுண்டப் பெருமாள் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம்
905 : _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் நந்திவர்மப் பல்லவன்
914 : _ _ |a 12.83711742
915 : _ _ |a 79.71008599
995 : _ _ |a TVA_SCL_000098
barcode : TVA_SCL_000098
book category : கற்சிற்பங்கள்
Primary File :

TVA_SCL_000098_வைகுண்டப்பெருமாள்-கோயில்_பல்லவ-அரசன்-பட்டாபிஷேகம்-001.jpg