000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a விஷ்ணு |
300 | : | _ _ |a வைணவம் |
340 | : | _ _ |a மணல் கல் |
500 | : | _ _ |a திருமாலின் உந்தியில் உதித்தோனாகிய நான்முகன் அவரை வணங்கி நிற்கும் காட்சி. |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a திருமால் சமபாதத்தில் ஓங்கி உயர்ந்த நிலையில் புன்னகை ததும்பும் முகத்துடன் நிற்கிறார். அவரின் பின் கைகள் சங்கு சக்கரம் தாங்கியுள்ளன. முன் கைகளில் வலது கை அபய முத்திரையாகவும், இடது கை தொடையில் வைத்த ஊரு முத்திரையாகவும் அமைந்துள்ளன. நீண்ட கிரீடமகுடம் தரித்து, கணுக்கால் வரை நீண்ட பட்டாடை அணிந்துள்ளார். நீள் காதுகளில் மகரகுண்டலங்கள் விளங்குகின்றன. கழுத்தில் சரப்பளி அணி செய்கின்றது. முப்புரிநூல் இடது மார்பிலிருந்து வலது கை வழியாக உடலின் பின்புறம் செல்கிறது. முப்புரி நூலின் பிரம்ம முடிச்சு இடது மார்பில் உள்ளது. கைகளில் முகப்புடன் கூடிய தோள்வளை, முன் வளை காட்டப்பட்டுள்ளன.முகப்புடன் கூடிய இடைக்கட்டு அணிந்துள்ளார். இடையாடை முடிச்சு பின்புறம் காட்டப்பட்டுள்ளது. அருகில் நான்முகன் பணிவாக இரண்டு கைகளை கூப்பியபடி வணங்கிய நிலையில் உள்ளார். மூன்று தலைகள் தெரிகின்றன. ஜடாமகுடம் தரித்து, நீள்காதுகளில் குண்டலங்கள் திகழ, கழுத்தில் சவடி அணி செய்ய, கணுக்கால் வரை நூலாடை அணிந்துள்ளார். நான்முகனின் பின்னிரு கைகளில் வலது கை வலது தொடையில் ஊரு முத்திரையாகவுமம், இடது கை கடக முத்திரையாகவும் அமைந்துள்ளன. கைகளில் கடக வளை, முன் வளை காட்டப்பட்டுள்ளன. |
653 | : | _ _ |a பிரம்மன், நான்முகன், திருமால், விஷ்ணு, பெருமாள், வைகுண்ட பெருமாள் கோயில், வைகுந்தப் பெருமாள் கோயில், இரண்டாம் நந்திவர்மன், காஞ்சிபுரம், தொண்டைமண்டலம், பல்லவர் கலைகள், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் சிற்பங்கள், விஷ்ணு சிற்பங்கள், பெருமாள் சிற்பங்கள், திருமால் சிற்பங்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a வைகுண்டப் பெருமாள் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம் |
905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் நந்திவர்மப் பல்லவன் |
914 | : | _ _ |a 12.83711742 |
915 | : | _ _ |a 79.71008599 |
995 | : | _ _ |a TVA_SCL_000089 |
barcode | : | TVA_SCL_000089 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |