MARC காட்சி

Back
சிம்ம யாளி
000 : nam a22 7a 4500
008 : 170508b ii 000 0 tam d
245 : _ _ |a சிம்ம யாளி
300 : _ _ |a பிற வகை
340 : _ _ |a தந்தம்
500 : _ _ |a சிங்க உடல் அமைப்பினைப் பெற்று விளங்கும் சிம்ம யாளி
510 : _ _ |a
  1. வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978. 
  2. T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914. 
  3. P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994. 
  4. .ஆசனபதம் 
  5. உக்கிரபீடம் 
  6. உபபீடகம் 
  7. தண்டிலம் 
  8. பரமசாயிகம் 
  9. மகாபீடபதம் 
  10. மண்டூகம் 
  11. மயமதம் 
  12. மானசாரம் 
  13. வாசுத்து சூத்திர உபநிடதம் 
  14. ஸ்ரீதத்வநிதி 
  15. அனுபோக பிரசன்ன ஆரூடம் 
  16. அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி 
  17. காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம் 
  18. சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
520 : _ _ |a யாளி ஒரு கற்பனை விலங்கு என்பது பலரது கருத்து. ஆயினும் இக்கருத்து ஆய்வுக்குரியது. தமிழகக் கோயில்களில் இடம் பெறும் யாளி அதிக ஆற்றல் வாய்ந்ததாகக் காட்டப்பட்டுள்ளது. யானையை தன் துதிக்கையால் தூக்கிய நிலையிலும், சிம்மத்தை பாய்ந்து தாக்கும் நிலையிலும் யாளிகள் சிற்பங்களில் காட்டப்பட்டுள்ளன. யாளி ஒரு தொன்ம உயிரினமாக இருந்து கால சுழற்சியால் அழிந்து போன விலங்கினத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. யாளிகள் பொதுவாக சிங்கத்தின் உடலமைப்பையும், பிடரியையும் கொண்டுள்ளன. சிம்ம யாளி, மகர யாளி, யானை யாளி என யாளி மூன்று வகைகளில் சிற்பங்களில் வடிக்கப்பட்டுள்ளன. யாளி வளமைக்கும், ஆற்றலுக்கும், வீரத்திற்குமான குறியீடாக விளங்குகிறது. யாளி நவக்கிரகங்களின் ஒன்றான புதனின் வாகனமாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. கற்றளிகள் உருவாகத் தொடங்கிய பல்லவர் காலத்திலிருந்தே தமிழகக் கோயில்களில் யாளிகள் முக்கிய இடம் பெறுகின்றன. கோயில்களில் பெரும்பாலும் யாளிகள் யாளித்தூண்களாகவே அதிக அளவில் காட்டப்பட்டுள்ளன. பழங்காலத்தில் தூண் வழிபாடே சிறப்புற்றிருந்தது. சிவலிங்கமும் தூண் வழிபாட்டில் ஒரு வகை தான் என்று உரைப்போரும் உண்டு. சங்க இலக்கியங்களில் இத்தூண் வழிபாடு கந்து வழிபாடு என அறியப்படுகிறது. எனவே தூண்களைத் தாங்கும் முகமாக, தூண்களாக அமைக்கப்பட்டுள்ள யாளிகள் மேல் ஆய்வுக்குரியவை. தந்தத்தினால் செய்யப்பட்ட இந்த யாளி சிற்பங்கள் சிம்ம யாளிகளாகும். யாளிகள் பின்னங்கால்களை ஊன்றி, முன்னங்கால்களை கைகளாக் கொண்டு எழுந்து நிற்கின்றன.யாளியின் வாயிலிருந்து கொடி போன்ற ஒன்று வெளி வருகிறது. அது வளமையைக் குறிப்பதாகும். யாளியின் கண்களும், பற்களும் உயிரோட்டமுடையதாக காட்டப்பட்டுள்ளன.
653 : _ _ |a யானைத் தந்த சிற்பங்கள், யாளி, சிம்ம யாளி, திருவரங்கம் தந்த சிற்பங்கள், ஸ்ரீரங்கம் தந்த சிற்பங்கள், திருச்சி, வாழ்வியல் சிற்பங்கள், ஸ்ரீரங்கநாதசுவாமி தேவஸ்தான அருங்காட்சியகம் தந்த சிற்பங்கள்
710 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
752 : _ _ |a திருவரங்கம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c திருவரங்கம் |d திருச்சி |f திருவரங்கம்
905 : _ _ |a கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர்
914 : _ _ |a 12.00275101
915 : _ _ |a 79.06188179
995 : _ _ |a TVA_SCL_000532
barcode : TVA_SCL_000532
book category : தந்தச் சிற்பங்கள்
cover images TVA_SCL_000532_திருவரங்கம்_சிம்ம-யாளி-001.jpg :
Primary File :

TVA_SCL_000532_திருவரங்கம்_சிம்ம-யாளி-001.jpg