000 |
: |
nam a22 7a 4500 |
008 |
: |
170508b ii 000 0 tam d |
245 |
: |
_ _ |a ஐந்தரி (இந்திராணி) |
300 |
: |
_ _ |a சாக்தம் |
340 |
: |
_ _ |a கருங்கல் |
500 |
: |
_ _ |a அன்னையர் எழுவர் தொகுதியில் ஆறாவதாக அமர்ந்துள்ள இந்திரனின் நாயகி இந்திராணி (ஐந்தரீ) |
510 |
: |
_ _ |a
- வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978.
- T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914.
- P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994.
- .ஆசனபதம்
- உக்கிரபீடம்
- உபபீடகம்
- தண்டிலம்
- பரமசாயிகம்
- மகாபீடபதம்
- மண்டூகம்
- மயமதம்
- மானசாரம்
- வாசுத்து சூத்திர உபநிடதம்
- ஸ்ரீதத்வநிதி
- அனுபோக பிரசன்ன ஆரூடம்
- அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி
- காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம்
- சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
|
520 |
: |
_ _ |a இந்திரனின் பெண் கூறாக விளங்குபவள் ஐந்தரி, மாஹேந்திரி என்றழைக்கப்படும் இந்திராணி. விஷ்ணுதர்மோத்திரம், இந்திராணி ஆயிரம் கண்களை உடையவர் என்று குறிப்பிடுகிறது. பொன்னிற மேனியையும், ஆறு கரங்களில் சூத்திரம், வஜ்ஜிரம், கலசம், பாத்திரம், அபயம், வரதம் தரித்திருப்பார் என்று குறிப்பிடுகிறது. தேவி புராணம் கூறுகையில் அங்குசமும் வஜ்ஜிரமும் தரித்திருப்பதாகவும், பூர்வகாரணாகமம் இரண்டு கண்கள் மட்டுமே பெற்றவர் என்று குறிப்பிடுகிறது. மூன்று கண்கள், நான்கு கரங்களைக் கொண்டவர். இரண்டு கரங்களில் வஜ்ரமும், சக்தியும், இரண்டு கரங்களில் அபயமும் வரதமும் கொண்டவர். சிவந்த மேனியை உடையவர். கிரீட மகுடம் தரித்து அனைத்து வித அணிகலன்களும் அணியப் பெற்றவர். இந்திரனின் வாகனமாகிய ஐராவதம் (வெள்ளை யானை) இலச்சினை பொறிக்கப் பெற்ற கொடியுடன் கற்பக விருட்சத்தின் கீழ் அமர்ந்திருப்பார். இச்சிற்பத்தில் இந்திராணி பூரிமத்துடன் கூடிய இரத்தின கிரீட மகுடம் தரித்தவராயும், பின்னிரு கைகளில் அங்குசம் மற்றும் பாசம் ஏந்தியவராயும் காணப்படுகிறார். நெற்றியில் நெற்றிப்பட்டை விளங்குகிறது. முன் வலது கை அபய முத்திரையும், இடது முன் கை தொடையில் வைத்தவாறும், வலது காலை தொங்க விட்டும், இடது காலை மடக்கி பீடத்தின் மீது வைத்தவாறும் நல்லிருக்கையில் (சுகாசனம்) அமர்ந்துள்ளார். நீள்செவிகளில் மகர குண்டலங்களும், மார்பில் சன்ன வீரமும், கழுத்தில் கண்டிகையும், சரப்பளியும், கைகளில் தோள்வளை, முன் வளைகள், விரல்களில் வளையங்கள் ஆகியன அணிந்துள்ளார். மார்பில் குஜபந்தம் என்னும் மார்புக்கச்சை காட்டப்பட்டுள்ளது. முப்புரிநூலிலிருந்து உரஸ்சூத்திரம் செல்கிறது. இடையில் அரைப்பட்டிகையுடன் கூடிய நீண்ட முழாடை முழங்காலுக்கு கீழ் வரை காட்டப்பட்டுள்ளது. கால்களில் சிலம்பும், சதங்கையும் அணி செய்கின்றன. இடைக்கட்டின் கடி பந்தம் முன் வளைந்து பீடத்தின் மீது விழுந்துள்ளது. இடைக்கட்டின் முடிச்சு வலது பின்புறம் தொடையில் காட்டப்பட்டுள்ளது. தேவியின் வலதுபுறம் நிற்கும் தூணின் மீது வாகனமான ஐராவதம் காட்டப்பட்டுள்ளது. |
653 |
: |
_ _ |a இந்திராணி, ஐந்தரி, மாஹேந்திரி, அன்னையர் எழுவர், சப்த மாதர், ஏழு கன்னியர், சப்தமாதர் தொகுதி, சப்த மாதர்கள், மலையடிப்பட்டி, புதுக்கோட்டை, சிவன் குடைவரை, புடைப்புச் சிற்பம், முற்காலப் பாண்டியர் சிற்பங்கள், பாண்டியர் கலைப்பாணி, பாண்டிய மண்டலம், பாண்டியர் குடைவரைகள் |
700 |
: |
_ _ |a காந்திராஜன் க.த. |
752 |
: |
_ _ |a மலையடிப்பட்டி சிவன் குடைவரைக் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c மலையடிப்பட்டி |d புதுக்கோட்டை |f கீரனூர் |
905 |
: |
_ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர் |
914 |
: |
_ _ |a 10.65417098 |
915 |
: |
_ _ |a 78.89684021 |
995 |
: |
_ _ |a TVA_SCL_000484 |
barcode |
: |
TVA_SCL_000484 |
book category |
: |
கற்சிற்பங்கள் |
Primary File |
: |
TVA_SCL_000484_மலையடிப்பட்டி-சிவன்-குடைவரைக்-கோயில்_ஐந்தரி-(இந்திராணி)-001.jpg
|