000 |
: |
nam a22 7a 4500 |
008 |
: |
170508b ii 000 0 tam d |
245 |
: |
_ _ |a திருமகள், பூமகள் உடனுறை திருமால் |
300 |
: |
_ _ |a வைணவம் |
340 |
: |
_ _ |a கருங்கல் |
500 |
: |
_ _ |a காக்கும் கடவுளாகிய திருமால் திருமகள், நிலமகளுடன் நின்ற கோலம் |
510 |
: |
_ _ |a
- வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978.
- T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914.
- P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994.
- .ஆசனபதம்
- உக்கிரபீடம்
- உபபீடகம்
- தண்டிலம்
- பரமசாயிகம்
- மகாபீடபதம்
- மண்டூகம்
- மயமதம்
- மானசாரம்
- வாசுத்து சூத்திர உபநிடதம்
- ஸ்ரீதத்வநிதி
- அனுபோக பிரசன்ன ஆரூடம்
- அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி
- காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம்
- சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
|
520 |
: |
_ _ |a தாங்குதளத்தின் மீது அமைந்துள்ள தாமரைப்பீடத்தின் மீது திருமால் சமபாதத்தில் நின்ற கோலத்தில் உள்ளார். தலைக்கு மேல் குடை காட்டப்பட்டுள்ளது. திருவாச்சி போன்ற எரிசுடர் நீள்வட்டம் தலைக்குப் பின் அமைந்துள்ளது. மேலே இரு கந்தர்வர்கள் பறந்த நிலையில் வாழ்த்தொலிக்கின்றனர். விஷ்ணு கிரீட மகுடராய், முத்துத்தாமங்களுடன் கூடிய நெற்றிப்பட்டை அணிந்து , நீள் செவிகளில் மகர குண்டலங்கள் திகழ, கழுத்தில் கண்டிகை, சரப்பளி, மணியாரம் அணி செய்ய நான்கு திருக்கைகளுடன் விளங்குகிறார். பின்னிரு கரங்களில் சங்கு சக்கரத்தைப் பிடித்துள்ளார். வலது முன் கை அபய முத்திரையும், இடது முன் கை ஏந்தல் கையாகவும் அமைந்துள்ளன. மார்பில் முப்புரி நூலும், ஸ்தன சூத்திரமும் செல்கின்றன. கைகளில் முன்வளைகள் தெரிகின்றன. விரல்களில் நடுவிரல் தவிர ஏனைய விரல்களில் வளையங்கள் அணியப்பட்டுள்ளன. இடையில் அரைப்பட்டிகை முகப்புடன் கூடியதாக அமைந்து, கணுக்கால் வரையிலான நீண்ட பட்டாடை மடிப்புகளுடன் அணிந்துள்ளார். ஆடையின் முடிச்சு இடையின் பின்புறம் காட்டப்பட்டு நீண்டு தொங்குகின்றன. தொடையில் குறிங்குச் செறி அணி அழகு செய்கின்றது. திருமாலின் அருகில் இருபுறமும் நிற்கும் தேவியர் இருவரும் வைஷ்ணவ நிலையில் நின்றுள்ளனர். கண்ணிமாலை நெற்றிப்பட்டையாக் கொண்டு, கரண்ட மகுடராய் காட்சியளிக்கின்றனர். அன்னையர் இருவருக்கும் மார்பில் குஜபந்தங்கள் காட்டப்பட்டுள்ளன. பொதுவாக நிலமகளுக்கு குஜபந்தம் காட்டப்படுவதில்லை. ஆனால் இங்கு இடம் பெற்றுள்ளது சிறப்பு. இடையில் அரைப்பட்டிகை முகப்புடன் கூடியதாக அமைந்து, கணுக்கால் வரையிலான நீண்ட பட்டாடை மடிப்புகளுடன் அணிந்துள்ளனர். அன்னையர் தாம் நிற்கும் பக்கத்திற்கேற்ப ஒரு கையை தொடையில் வைத்தவாறு ஊரு முத்திரையாகவும், மற்றொரு கையில் மலரைப் பிடித்தபடியும் நிற்கின்றனர். |
653 |
: |
_ _ |a திருமால், விஷ்ணு, நாராயணன், பெருமாள், நின்ற கோலம், திருமகள், நிலமகள், தஞ்சை பெருவுடையார் கோயில், பிரகதீஸ்வரர் கோயில், இராஜராஜீச்சுவரம், பெரிய கோயில், தக்ஷிணமேரு, முதலாம் இராஜராஜன், சோழர் கற்றளி, சோழர் கலைப்பாணி, சோழர் கலைக்கோயில்கள், சோழர் கட்டடக்கலை, இடைக்காலச் சோழர் கோயில், தஞ்சாவூர், சோழநாட்டு சிவத்தலங்கள், சோழர்கள் |
700 |
: |
_ _ |a காந்திராஜன் க.த. |
752 |
: |
_ _ |a தஞ்சை பெருவுடையார் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c தஞ்சாவூர் |d தஞ்சாவூர் |f தஞ்சாவூர் |
905 |
: |
_ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜன் |
914 |
: |
_ _ |a 10.7831901 |
915 |
: |
_ _ |a 79.13123578 |
995 |
: |
_ _ |a TVA_SCL_000366 |
barcode |
: |
TVA_SCL_000366 |
book category |
: |
கற்சிற்பங்கள் |
Primary File |
: |
TVA_SCL_000366_தஞ்சை-பெருவுடையார்-கோயில்_திருமகள்-பூமகள்-உடனுறை-திருமால்-001.jpg
|