000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a திருமகள், பூமகள் உடனுறை திருமால் |
300 | : | _ _ |a வைணவம் |
340 | : | _ _ |a மணல் கல் |
500 | : | _ _ |a திருமாலின் அமர்வுக் கோலம் திருமகள், பூமகள் உடனுறையும் திருமால் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a பீடத்தின் மீது வலதுகாலை மடக்கி, இடது காலைத் தொங்கவிட்டு சுகாசனத்தில் அமர்ந்திருக்கும் விஷ்ணு, நான்கு திருக்கைகளுடன் விளங்குகிறார். மேலிரு கைகளில் சக்கரம், சங்கு திகழ்கின்றன. கீழிரு கைகளில் வலது கை அபய முத்திரையாகவும், இடது கை யோக முத்திரையாகவும் காட்டப்பட்டுள்ளன. கிரீட மகுடம் அணிந்துள்ள பெருமாள் காதுகளில் மகரகுண்டலங்கள் திகழ, கழுத்தில் சவடி துலங்க, மார்பில் முப்புரிநூல் அணிந்து, கணுக்கால் வரை பட்டாடை நெகிழ அமர்ந்துள்ளார். ஆடையின் முடிச்சுகள் பீடத்தின் கீழே வீழ்ந்துள்ளன. கைகளில் முன்வளை, கடகவளை, தோள்வளைகள் அமைந்துள்ளன. திருமாலின் இருபுறமும் தேவிகள் அமர்ந்துள்ளனர். வலதுபுறத்தில் திருமகளும், இடது புறத்தில் நிலமகளும் உள்ளனர். தேவியர் இருவருக்கும் தலைமகுடங்கள் வேறுபட்டுள்ளன. வலத்திலிருப்பவர் இடது காலை குத்துக்காலிட்டு, வலது காலை தொங்விட்டும், இடபுறத்திலிருப்பவர் முன்னவருக்கு எதிர்மறையாகவும் ஆசனங்களைக் கொண்டுள்ளனர். ஆடையணிகள் ஒன்று போலவே அணியப்பட்டுள்ளன. அன்னையர் இருவரும் அமர்ந்திருக்கும் பீடத்தை யானைகள் தாங்குகின்றன. அமர்ந்திருக்கும் திருமாலின் இருபுறமும் சாமரம் வீசும் இருவர் காட்டப்பட்டுள்ளனர். |
653 | : | _ _ |a திருமால், விஷ்ணு, பெருமாள், இராஜசிம்மேசுவரம், இராஜசிம்மன் கற்றளி, இராஜசிம்மவர்மப்பல்லவன், காஞ்சிபுரம், தொண்டை மண்டலம், பல்லவர் சிற்பம், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் கலைகள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a கைலாசநாதர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம் |
905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
914 | : | _ _ |a 12.84226806 |
915 | : | _ _ |a 79.6897132 |
995 | : | _ _ |a TVA_SCL_000034 |
barcode | : | TVA_SCL_000034 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |