510 |
: |
_ _ |a
- வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978.
- T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914.
- P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994.
- .ஆசனபதம்
- உக்கிரபீடம்
- உபபீடகம்
- தண்டிலம்
- பரமசாயிகம்
- மகாபீடபதம்
- மண்டூகம்
- மயமதம்
- மானசாரம்
- வாசுத்து சூத்திர உபநிடதம்
- ஸ்ரீதத்வநிதி
- அனுபோக பிரசன்ன ஆரூடம்
- அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி
- காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம்
- சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
|
520 |
: |
_ _ |a சூரிய பகவான் பரிதி, பாற்கரன், ஆதித்தன், பனிப்பகை, சுடர், பதங்கள், இருள்வலி, சவிதா, சூரன், ஏல், மார்த்தாண்டன், என்றூழ், அருணன், ஆதவன், மித்திரன், ஆயிரஞ்சோதியுள்ளோன், தரணி, செங்கதிரோன், சண்டன், தபனன், ஒளி, சான்றோன், அனலி, அரி, பானு, அலரி, அண்டயோனி, கனலி, விகர்த்தனன், கதிரவன், பகலோன், வெய்யோன், தினகரன், பகல், சோதி, திவாகரன், அரியமா, இனன், உதயன், ஞாயிறு, எல்லை, கிரணமாலி, ஏழ்பரியோன், வேந்தன், விரிச்சியன், விரோசனன், இரவி, விண்மணி, அருக்கன் ஆகிய பெயர்களைப் பெற்றுத் திகழ்கிறார். இளையராய்த் திகழும் வெய்யக் கடவுள் சமபாதத்தில் நின்றுள்ளார். இரு கைகளிலும் தாமரை மலரைப் பிடித்துள்ளார். தலையின் பின்னால் ஒளி வட்டம் திகழ்கிறது. கரண்ட மகுடம் அணிந்து, நீள் காதுகளில் பத்ரகுண்டலங்கள் திகழ, மார்பில் சரப்பளி, சவடி விளங்க, வயிற்றில் உதரபந்தம், மார்பில் முப்புரிநூல், இடையில் முகப்புடன் அமைந்த அரைப்பட்டிகையுடன் கூடிய தொடை வரையிலான அரையாடை அணிந்துள்ளார். தொடையில் இடையிலிருந்து குறங்கு செறி என்னும் இடையணி தொங்குகின்றது. இடைக்கட்டு ஆடையின் முடிச்சு இருபுறமும் காட்டப்பட்டு நீண்டு தொங்குகின்றது. ஒளிக்கடவுளின் இச்சிற்பம் பண்டு வண்ணம் தீட்டப்பட்டிருக்க வேண்டும். |
653 |
: |
_ _ |a சூரியன், வெய்யோன், அருகன், பகலவன், ஒளிக்கடவுள், தாராசுரம், ஐராவதேஸ்வரர் கோயில், இரண்டாம் இராஜராஜன், பிற்காலச் சோழர் கலைப்பாணி, பிற்காலச் சோழர் சிற்பங்கள் |