000 |
: |
nam a22 7a 4500 |
008 |
: |
170508b ii 000 0 tam d |
245 |
: |
_ _ |a கஜசம்ஹாரமூர்த்தி (கஜாரி) |
300 |
: |
_ _ |a சைவம் |
340 |
: |
_ _ |a கருங்கல் |
500 |
: |
_ _ |a ஆனையுரித்த தேவர் யானையின் உடலை உரித்து நிற்கும் வதைக்காட்சி |
510 |
: |
_ _ |a
- வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978.
- T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914.
- P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994.
- .ஆசனபதம்
- உக்கிரபீடம்
- உபபீடகம்
- தண்டிலம்
- பரமசாயிகம்
- மகாபீடபதம்
- மண்டூகம்
- மயமதம்
- மானசாரம்
- வாசுத்து சூத்திர உபநிடதம்
- ஸ்ரீதத்வநிதி
- அனுபோக பிரசன்ன ஆரூடம்
- அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி
- காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம்
- சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
|
520 |
: |
_ _ |a தாருகானவத்து முனிவர்களின் ஆணவத்தினை அடக்க சிவபெருமான் பிட்சாடனர் வடிவினை ஏற்றுச் சென்றார். வனத்தில் பிட்சாடனரைக் கண்ட முனிப்பத்தினிகள் கற்புநெறி தவறி அவருடன் சென்றனர். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் பிட்சாடனர் மீது தங்களுடைய தவ வலிமையால் எண்ணற்ற கொடிய உயிர்களையும், பொருட்களையும் ஏவினர். மான், புலி ஆகிய மிருகங்களைத் தொடர்ந்து மதங்கொண்ட யானையை அனுப்பினர். சிவபெருமான் அட்டாமா சித்திகளுள் ஒன்றான அணிமா சக்தியால் மிகவும் சிறியதாக மாறி, யானையின் வயிற்றுக்குள் சென்றார். பின் மாவுருவம் கொண்டு வயிற்றைக் கிழித்து வெளியே வந்தார். யானையின் தோலை தன்னுடைய ஆடையாகப் போர்த்திக் கொண்டார், இந்த வடிவமே கஜாரி. சம்ஹார மூர்த்தங்களுள் ஒன்றாக விளங்கும் இறைவனின் அட்ட வீரட்ட செயல்களில் ஒன்றான ஆனையை உரித்து வதைக்கும் காட்சி. ஆனையை உரிக்கும் இறைவனின் வலிமையை உணர்த்தும் சிற்பமாகவும், உமை வியந்து, அஞ்சிட நிற்பதாகவும் இச்சிற்பம் வடிக்கப்படுவது இயல்பு. ஆனால் இச்சிற்பத்தில் உமை காட்டப்படவில்லை. இடது காலை யானையின் தலை மேல் வைத்தவாறும், வலது காலை நிலத்தில் ஊன்றியவாறும் ஊர்த்துவஜானுவில் யானையை உரித்த நிலையில் நிற்கிறார். மகர பூரிமத்துடன் கூடிய தலையணி கொண்டுள்ளார். ஜடாமண்டலம் தலைக்கோலமாய் அமைந்துள்ளது. தலையில் நாகம் ஒன்று படமெடுக்கிறது. நெற்றியில் நெற்றிப்பட்டை அணி செய்கிறது. எட்டுத் திருக்கைகளுடன் ஆனையுரித்த பிரான் விளங்குகிறார். பின்னிரு கைகளால் யானையின் உடலைக் கிழித்து, தோலை விரித்தவாறும், மற்ற வலது கைகளில் சூலம், ஒடித்த கொம்பு ஆகியனவும், இடது முன் கை ஏந்தல் கையாகவும், அமைந்துள்ளன. கைகளில் முன்வளை, தோள்வளைகள் காட்டப்பட்டுள்ளன. கழுத்தில் கண்டிகை, சரப்பளி அணிகள் உள்ளன. வயிற்றில் உதரபந்தம் உள்ளது. முப்புரிநூல் கனமாகக் காட்டப்பட்டுள்ளது. காதுகளில் பத்ர குண்டலங்கள் காட்டப்பட்டுள்ளன. அரைப்பட்டிகையுடன் கூடிய இடையாடை தொடை வரை அணிந்துள்ளார். நெரித்த புருவமும் வெருட்டும் விழிகளுமாய் கோபக் கனலாய் ஆனையர் நிற்கிறார். நெற்றியில் கண் காட்டப்பட்டுள்ளது. |
653 |
: |
_ _ |a ஆனையுரித்த தேவர், ஆனையுரித்த பிரான், கரிபுராரி, கரியுரித்தோன், கரியுரி போர்த்தோன், கஜாரி, கஜசம்ஹாரமூர்த்தி, திருவாலீஸ்வரம், கைலாயமுடையார் கோயில், கைலாசநாதர் கோயில், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், முதலாம் இராஜராஜன் கோயில், சோழர் கலைப்பாணி, பாண்டிய மண்டலம், சோழ பாண்டியர் கலைப்பாணி, பாண்டிய நாட்டில் சோழர் கோயில், சிவன் கோயில், சிவத்தலங்கள் |
700 |
: |
_ _ |a காந்திராஜன் க.த. |
752 |
: |
_ _ |a கைலாசநாதர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c திருவாலீஸ்வரம் |d திருநெல்வேலி |f அம்பாசமுத்திரம் |
905 |
: |
_ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜ சோழன் |
914 |
: |
_ _ |a 8.73252599 |
915 |
: |
_ _ |a 77.44489074 |
995 |
: |
_ _ |a TVA_SCL_000262 |
barcode |
: |
TVA_SCL_000262 |
book category |
: |
கற்சிற்பங்கள் |
Primary File |
: |
TVA_SCL_000262_கைலாசநாதர்-கோயில்_கஜசம்ஹாரமூர்த்தி-(கஜாரி)-001.jpg
|