000 |
: |
nam a22 7a 4500 |
008 |
: |
170508b ii 000 0 tam d |
245 |
: |
_ _ |a அர்த்தநாரீஸ்வரர் |
300 |
: |
_ _ |a சைவம் |
340 |
: |
_ _ |a கருங்கல் |
500 |
: |
_ _ |a மாதொரு பாகனாய் நிற்கும் மகாதேவர் |
510 |
: |
_ _ |a
- வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978.
- T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914.
- P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994.
- .ஆசனபதம்
- உக்கிரபீடம்
- உபபீடகம்
- தண்டிலம்
- பரமசாயிகம்
- மகாபீடபதம்
- மண்டூகம்
- மயமதம்
- மானசாரம்
- வாசுத்து சூத்திர உபநிடதம்
- ஸ்ரீதத்வநிதி
- அனுபோக பிரசன்ன ஆரூடம்
- அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி
- காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம்
- சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
|
520 |
: |
_ _ |a அர்த்தநாரீசுவரர் நந்தியின் மீது ஒயிலாக சாய்ந்தபடி உள்ளார். இடது காலை ஊன்றி, வலது காலை தளர்வாக வைத்த வைஷ்ணவ நிலையில் நிற்கிறார். உமையொரு பாகன் சிற்பத்தில் வலது பாதி சிவனாகவும், இடது பாகம் உமையாகவும் அமைந்துள்ளது. தலையில் வலதுபுறம் ஜடாமகுடமாகவும், இடது பகுதியில் கரண்ட மகுடமாகவும் அமைக்கப்பட்டுள்ளன. நெற்றிப்பட்டை சிவனுக்கு மணிகள் பதித்ததாகவும், உமைக்கு கண்ணி மாலையாகவும் காணப்படுகின்றன. நெற்றியில் வலது பக்கத்தில் முக்கண் உள்ளது. நீள்காதுகளில் அம்மை குதம்பையும், பெருமகனார் நாககுண்டலமும் அணிந்துள்ளனர். கழுத்தில் சிவ பாதியில் கண்டிகையும், சரப்பளியும், அரும்புச்சரமும், பெண் பாதியில் மணிமாலை, முத்துச்சரமும் அணியப்பட்டுள்ளன. மார்பில் முப்புரி நூல் வலதில் பட்டையாகவும், இடது புறம் செல்லும் போது நூலாகவும் பிரிந்து செல்கிறது. மாதொரு பாகரின் தோளில் உள்ள வாகுமாலை மாதுக்கும் காட்டப்பட்டுள்ளது. தேவிக்கு இடது கையும், பெருமானுக்கு வலது இரு கைகளும் காட்டப்பட்டுள்ளன. தேவி தன் இடது கரத்தில் மலர் ஒன்றை பிடித்துள்ளார். (வட்ட வடிவமான கண்ணாடியாகவும் இருக்கலாம்). கைகளில் மகர பூரிமம் அமைந்த தோள்வளையும், நான்கு முன்வளைகளும் அணிந்துள்ளார். அம்மையப்பருக்கு பின்புறமாக நிற்கும் நந்தியின் முதுகில் உள்ள திமிலின் மீது இறையனார் தன் வலது முன் கையை ஊன்றியுள்ளார். வலது பின் கை மழுவை ஏந்தியள்ளது. நந்தியின் முகம் குனிந்துள்ளது. மாதொரு பாகரும் அவர்தம் மங்கையும் அணிந்துள்ள தோள்வளைகள் வடிவத்தில் வேறுபட்டுள்ளன. இருவருக்கும் விரல்களில் வளையங்கள் உள்ளன. இடையில் அரைப்பட்டிகை முகப்புடன் கூடியதாக உள்ளது. மேகலை அணியப்பட்டுள்ளது. சிவனார் அரையாடையும், உமையாள் மடிப்புகளுடன் நீண்ட பட்டாடையும் அணிந்துள்ளனர். தேவியின் ஆடையின் கொசுவம் இடது தொடையில் தொங்குகிறது. |
653 |
: |
_ _ |a அர்த்தநாரீஸ்வரர், மாதொரு பாகர், உமையொரு பாகர், அம்மையப்பர், சிவசக்தி, மங்கையொரு பாகன், வேயுறு தோளி பங்கன், திருவாலீஸ்வரம், கைலாயமுடையார் கோயில், கைலாசநாதர் கோயில், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், முதலாம் இராஜராஜன் கோயில், சோழர் கலைப்பாணி, பாண்டிய மண்டலம், சோழ பாண்டியர் கலைப்பாணி, பாண்டிய நாட்டில் சோழர் கோயில், சிவன் கோயில், சிவத்தலங்கள் |
700 |
: |
_ _ |a காந்திராஜன் க.த. |
752 |
: |
_ _ |a கைலாசநாதர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c திருவாலீஸ்வரம் |d திருநெல்வேலி |f அம்பாசமுத்திரம் |
905 |
: |
_ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜ சோழன் |
914 |
: |
_ _ |a 8.73252599 |
915 |
: |
_ _ |a 77.44489074 |
995 |
: |
_ _ |a TVA_SCL_000253 |
barcode |
: |
TVA_SCL_000253 |
book category |
: |
கற்சிற்பங்கள் |
Primary File |
: |
TVA_SCL_000253_கைலாசநாதர்-கோயில்_அர்த்தநாரீஸ்வரர்-001.jpg
|