MARC காட்சி

Back
அப்சரஸ்
000 : nam a22 7a 4500
008 : 170508b ii 000 0 tam d
245 : _ _ |a அப்சரஸ்
300 : _ _ |a புராணச் சிற்பம்
340 : _ _ |a கருங்கல்
500 : _ _ |a எழில் மிகு தோற்றத்துடன் நிற்கும் ஏந்திழையாள் அப்சரஸ் எனப்படும் தேவ மங்கை
510 : _ _ |a
  1. வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978. 
  2. T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914. 
  3. P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994. 
  4. .ஆசனபதம் 
  5. உக்கிரபீடம் 
  6. உபபீடகம் 
  7. தண்டிலம் 
  8. பரமசாயிகம் 
  9. மகாபீடபதம் 
  10. மண்டூகம் 
  11. மயமதம் 
  12. மானசாரம் 
  13. வாசுத்து சூத்திர உபநிடதம் 
  14. ஸ்ரீதத்வநிதி 
  15. அனுபோக பிரசன்ன ஆரூடம் 
  16. அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி 
  17. காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம் 
  18. சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
520 : _ _ |a அப்ஜம்’ என்றால் தாமரை; 'சரஸ்’ என்றால் நீர்நிலை. இரண்டு சொல்லும் சேர்ந்து அப்ஜசரஸ்- அப்சரஸ் ஆனது. தாமரை மலர் நிறைந்த குளம் போல மனதுக்கு மகிழ்ச்சியும் இதமும் தரும் தேவ மங்கையர் என்று பொருளாகும். இவர்கள் அரம்பையர் எனப்படுவர். பாற்கடலில் அறுபதாயிரம் (60,000) அரம்பையர்கள் தோன்றினார்கள். அவர்கள் வசிப்பதற்காக தனித்த உலகம் வேண்டியும், என்றுமே இளமை குன்றாக் கன்னிகளாகவும் இருக்க வேண்டி சிவபெருமானை நோக்கி தவமிருந்தார்கள். அவர்களி்ன் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அறுபதாயிரம் தேவ கன்னிகள் வாழ அப்சரஸ் லோகம் என்பதை உருவாக்கி தந்தார். அரம்பையர்கள் சிவபூஜையை மேற்கொள்கின்றவர்கள். உமையவளுக்கு துணையாக இருக்கின்றவர்கள். பேரரழகு வாய்ந்தவர்கள். பலவித இசையை யாழில் மீ்ட்டுகின்ற திறனும், மயக்கும் குரலில் பாடலை இயற்றுபவர்களாகவும், நடனக் கலையில் வல்லமை படைத்தவர்களாகவும் அறியப்படுகிறார்கள். அரம்பையர்களை வழிபட்டால் இளமையும், செல்வமும், மகிழ்ச்சியும் கிடைக்குமென புராணங்கள் கூறுகின்றன. இந்த வழிபாட்டு முறை பழங்காலத்தில் இருந்துள்ளது. தற்போது இந்தியாவின் வடக்கு பகுதியில் ஸ்ரீலட்சுமி பூஜையில் அரம்பையர்களை வழிபடும் வழக்கமும் உள்ளது. பாண்டிய நாட்டில் உள்ள கழுகு மலை வெட்டுவான் கோயிலில் இந்த அரம்பையர் சிற்பங்கள் காட்டப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றான இப்பெண் இடை வரை மட்டுமே செதுக்கப்பட்டுள்ளது. இடது கையை ஊன்றி வலது கையை மடித்து, கடக முத்திரை (நண்டுப்பிடி) காட்டுகிறாள். சுருள் குழல்கள் முன் நெற்றியில் வரிசையாக அலங்காரம் செய்யப்பட்டுள்ளது தலையின் பின்னால் நீண்ட சுருள் குழல்கள் தொங்குகின்றன. காதுகளில் தாடங்கம் என்னும் தோடுகள் அணிந்துள்ளார். கழுத்தில் சரப்பளியும், பதக்கத்துடன் கூடிய ஆரமும் அணிந்துள்ளார். கைகளில் தோள் வளைகளும் மணிகட்டில் இரு வளைகளும் உள்ளன. வட்ட முகத்துடன், கொடியிடையுடன் இப்பெண் நிற்கிறாள்.
653 : _ _ |a பாண்டிய நாட்டுப் பெண் சிற்பம், அப்சரஸ், அரம்பையர்கள் தேவ மகளீர், தேவ கன்னிகள், அப்சரஸ்கள், பாண்டியர் குடைவரை, கழுகு மலை, கழுகு மலை வெட்டுவான் கோயில், முற்காலப் பாண்டியர் கலைப்பாணி, பாண்டியர் ஒற்றைத் தளி, பாண்டியர் கலைகள், பாண்டிய நாடு, பாண்டியர், பாண்டிய மண்டலம்
700 : _ _ |a காந்திராஜன் க.த.
752 : _ _ |a கழுகு மலை வெட்டுவான் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c கழுகு மலை |d தூத்துக்குடி |f கோவில்பட்டி
905 : _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர்
914 : _ _ |a 9.15296112
915 : _ _ |a 77.70432074
995 : _ _ |a TVA_SCL_000202
barcode : TVA_SCL_000202
book category : கற்சிற்பங்கள்
Primary File :

TVA_SCL_000202_கழுகு-மலை-வெட்டுவான்-கோயில்_அப்சரஸ்-001.jpg