000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a கோவர்த்தனன் |
300 | : | _ _ |a வைணவம் |
340 | : | _ _ |a மணல் கல் |
500 | : | _ _ |a தனக்கு விழாநடத்தி வழிபடாத ஆயர்குலத்தின் மீது கோபமுற்ற இந்திரனால் உண்டான பெருமழையிலிருந்து ஆயர்குலத்தைக் காக்க மலையை குடையாக எடுத்த கோவர்த்தனர் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ண அவதாரத்தில் இந்திரனால் உண்டான பெருமழையின் அழிவிலிருந்து ஆயர் குலத்தைக் காக்க கோவர்த்தன மலையை குடையாய் பிடிக்கும் கோவர்த்தனதாரி சிற்பம். இச்சிற்பத்தில் விஷ்ணு அரையாடையுடன் காட்டப்பட்டுள்ளது சிறப்பு. பெரும்பாலும் திருமாலின் சிற்ப வடிவங்களில் அவருக்கு கணுக்கால் வரையிலான பட்டாடையே காட்டப்பட்டிருக்கும். இடது காலை சற்று மேலே தூக்கி வைத்து வலது காலை ஊன்றி ஊர்த்துவ ஜானுவில் நிற்கிறார். வலது கையை இடையில் வைத்தவாறும், இடது கையை மேலே உயர்த்தி மலையைத் தாங்கிப் பிடித்தவாறும் உள்ளார். நீண்ட கிரீட மகுடமணிந்து, நீள்காதுகளில் மகரக்குழை பூண்டுள்ளார். மார்பில் முப்புரிநூல் செல்கிறது. கைகளில் தோள்வளை, முன்வளை, கால்களில் வீரக்கழல்கள் அமைந்துள்ளன. கிரிதர கோபாலரின் அருகில் காட்டப்பட்டுள்ள இருவுருவங்களை அடையாளங் காணக்கூடவில்லை. சிதைந்துள்ளன. |
653 | : | _ _ |a கோவர்த்தனதாரி, கோவர்த்தனன், கோவர்த்தனர், கிரிதர கோபாலன், குன்று குடையாய் எடுத்த திருமால், இரண்டாம் நந்திவர்மன், காஞ்சிபுரம், தொண்டை மண்டலம், பல்லவர் சிற்பம், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் கலைகள், வைகுண்டப் பெருமாள் கோயில், விஷ்ணு சிற்பங்கள், திருமால் சிற்பங்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a வைகுண்டப் பெருமாள் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம் |
905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் நந்திவர்மப் பல்லவன் |
914 | : | _ _ |a 12.83711742 |
915 | : | _ _ |a 79.71008599 |
995 | : | _ _ |a TVA_SCL_000102 |
barcode | : | TVA_SCL_000102 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |