சிற்பம்

நிசீதித் தூண்
சிற்பத்தின் பெயர் | நிசீதித் தூண் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | மைய அருங்காட்சியகம், சென்னை |
ஊர் | தனவாலப்பாடு |
மாவட்டம் | கடப்பா மாவட்டம், ஆந்திரப்பிரதேசம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சமணம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி. 14-ஆம் நூற்றாண்டு |
அளவுகள் / எடை | 39X18 செ.மீ |
விளக்கம்
இச்சிற்பத் தொகுதி இரு சதுர வடிவங்களாய் காட்டப்பட்டுள்ளன. மேலே தீர்த்தங்கரரின் அமர்வு. தீர்த்தங்கரரின் தலைக்கு மேல் நாகம் குடை பிடிக்கிறது. அதற்கு மேல் முக்குடை காட்டப்பட்டுள்ளது. முனிவர் அமர்ந்துள்ள தாங்குதளத்தின் கண்டப்படையின் மையத்தில் ஸ்வஸ்திகம் காணப்படுகிறது. எனவே அவர் சுபர்சுவநாதராய் இருக்கலாம். கீழே உள்ள புடைப்பில் இரு அடியவர் அமர்ந்துள்ளனர். அவர்களுக்கு நடுவே கெண்டி ஒன்று உள்ளது.
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | திரு.சுந்தர்ராஜ், பரிவாதினி ஸ்டுடியோ, சென்னை. |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
தேசிய மைய அருங்காட்சியகம் சென்னை எழும்பூரில் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாட்டு மற்றும் இந்தியப் பகுதிகளில் இருந்து வந்த பழமையான தொல்பொருட்கள், கலைவடிவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவைகளாக சிற்பங்களைக் கூறலாம். பல காலகட்டங்களைச் சேர்ந்த அரசுகளின் கலைப்பாணியில் வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள் இங்கு பாதுகாக்கப்பட்டுள்ளன. கல், மரம், உலோகம், சுதை போன்ற மூலப்பொருட்களால் ஆக்கப்பட்ட சமயம், வாழ்வியல், கலை மற்றும் பொது வடிவங்கள் சிற்பங்களாக உள்ளன. சிவ வடிவங்கள், விஷ்ணு உருவங்கள், சமண தீர்த்தங்கரர்கள், புத்தர், முருகன், கணபதி, ஜேஷ்டா, மகிஷாசுரமர்த்தினி போன்ற சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. அவை எண்ணிக்கையிலும் அதிகம் காணப்படுகின்றன. கலைப்பொருட்களாக பாதுகாக்கப்பட்டுள்ள சிற்பங்கள் கலை, புராணம், சமயம், பண்டைய சமூகம், பண்பாடு, பொருளாதாரம் ஆகியவற்றின் வரலாறு அறிய மிகவும் உதவியாய் இருக்கின்றன.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 14 |
பிடித்தவை | 0 |